Skip to main content
  பௌத்தமதம் தமிழ்நாட்டில் வளர்ச்சி பெற்ற வரலாறு
 
 
 பௌத்தமதம் வடநாட்டினின்று தென்னாட்டிற்கு எந்தக் காலத்தில் வந்ததென்பதை முன் அதிகாரத்தில் ஆராய்ந்தோம்இந்த மதம் தமிழ்நாட்டில் எவ்வாறு பரவியதுஎன்பதனை ஈண்டு ஆராய்வோம்.
     இந்த மதம் உலகமெங்கும் பரவுவதற்குக் காரணமாயிருந்தது சங்கம். 'சங்கம்என்றால் பௌத்த பிக்ஷுக்களின் கூட்டம்பௌத்த மதத்தில் 'மும்மணிஎன்றுசொல்லப்படும் புத்ததம்மசங்கம் என்னும் மூன்றனுள் இம்மதத்தின் உயிர்நிலையாயிருந்தது சங்கமேசங்கத்தின் அங்கத்தினரான தேரர்கள் நாடெங்குஞ் சென்றுபௌத்த தர்மத்தை (கொள்கையை)ப் பரவச் செய்தபடியால்இந்த மதம் அந்தந்த நாட்டுமக்களால் மேற்கொள்ளப்பட்டு மேலோங்கி நின்றது.
     புத்தர் நிர்வாணம் அடைந்த பிறகுஅவரைப் பின்பற்றியொழுகிய பிக்ஷுக்கள் பற்பல நாடுகளிலும் சென்று இம் மதக்கொள்கையைப் பரவச் செய்தது போலவே,தமிழ்நாட்டிலும் வந்து நகரம், கிராமம் முதலிய எல்லாவிடங்களிலும் தமது மதக் கொள்கையைப் போதிப்பதையே தமது வாழ்நாட்களின் குறிக்கோளாகக்கொண்டிருந்தார்கள்தமிழ்நாட்டில் ஆங்காங்கிருந்த அரசர்வணிகர்செல்வந்தர் முதலானவர்களின் பொருளுதவி பெற்று விகாரைகளையும்பள்ளிகளையும்,சேதியங்களையும்ஆராமங்களையும் ஆங்காங்கே நிறுவினார்கள்மடங்களில் வாழும் பௌத்தத் துறவிகள் மருத்துவம் பயின்றுதம்மிடம் வரும் பிணியாளர்களுக்குஇலவசமாக மருந்து கொடுத்துத் தொண்டு செய்து வந்தார்கள்அன்றியும் தமது பள்ளிகளில் பாடசாலைகளை அமைத்துச் சிறுவர்களுக்குக்  கல்வியையுங் கற்பித்துவந்தார்கள்பௌத்தருக்குரிய நன்னாட்களில் நாட்டுமக்களைத் தமது பள்ளிக்கு அழைத்துமணல் பரப்பிய முற்றங்களில் அமரச் செய்துதிரிபிடகம்புத்த ஜாதகக்கதைகள்புத்த சரித்திரம் முதலான நூல்களை ஓதிப் பொருள் சொல்லியும் மக்களுக்கு மதபோதனை செய்துவந்தனர்மற்றும் குருடர்செவிடர்முடவர்முதலானவருக்கும்ஏழைகளுக்கும் உணவு கொடுத்துதவ அறச்சாலைகளை அரசர் செல்வந்தர் முதலானோர் உதவி பெற்று நிறுவினார்கள்கி.பிஇரண்டாம்நூற்றாண்டில் இருந்த  கோவலன் மகள் மணிமேகலை என்பவள்பௌத்த மதம் புகுந்து துறவு பூண்டுபுகார்ப்பட்டினத்துக்கு அருகில் இருந்த சக்கரவாளக் கோட்டத்தைச்சேர்ந்த உலக அறவி என்னும் அம்பலத்தில் இருந்த குருடர்முடவர்பசிநோய்கொண்ட வறியவர் முதலியவர்களுக்கு உணவு கொடுத்து ஆதரித்த செய்தியைமணிமேகலை 17ஆம் காதையினால் அறிகிறோம்அன்றியும்மணிமேகலை சிறைக்கோட்டம் சென்று சிறையில் வாடும் மக்களுக்கு உணவு கொடுத்து உண்பிக்க,அதனை அறிந்த சோழ அரசன் அவளை அழைத்துநான் உனக்குச் செய்யவேண்டுவது என்ன என்று கேட்கஅவள்சிறைக் கோட்டத்தை அறக்கோட்டமாக்க வேண்டும்என்று கேட்கஅரசனும் அவ்வாறே சிறைக் கோட்டத்தை அறக்கோட்டமாக்கிக் கொடுத்தான் என்று மணிமேகலை 19ஆம் காதையினால் அறிகிறோம்அவ்வறக்கோட்டம்,
 "அரசன் ஆணையின் ஆயிழை அருளால்,
நிரயக் கொடுஞ் சிறை நீக்கிய கோட்டம்,
தீப்பிறப் புழந்தோர் செய் வினைப் பயத்தால்
யாப்புடை நற்பிறப் பெய்தினர் போலப்
பொருள்புரி நெஞ்சிற் புலவோன் கோயிலும்,
அருள்புரி நெஞ்சத் தறவோர் பள்ளியும்,
அட்டிற் சாலையும், அருந்துநர் சாலையும்
கட்டுடைச் செல்வம் காப்புடைத் தாக
    ஆயிற்று என்று மணிமேகலை 20 ஆம் காதையில் அறிகிறோம்இவ்வாறு நாட்டுமக்களுக்கு நலம் புரிந்து கொண்டே பௌத்தமதத்தின் கொள்கைகளையும் போதித்துவந்தபடியால்இந்த மதம் தமிழ்நாட்டிலிலும் நன்கு பரவிவளர்ந்தது.
     இவையன்றியும்இந்த மதம் மேல்சாதி கீழ்சாதி என்று பிறப்பினால் உயர்வு தாழ்வு பாராட்டாதபடியினாலும் எக்குடியிற்பிறந்தோராயினும்அன்னவர் கல்விஅறிவுகளிற் சிறந்தோராய்த் தம்மதக் கொள்கைப்படி ஒழுகுவாராயின்அவரையுந் தங்குருவாகக் கொள்ளும் விரிந்த மனப்பான்மை கொண்டிருந்தபடியினாலும்,அக்காலத்தில் சாதிப்பாகுபாடற்றிருந்த தமிழர் இந்த மதத்தை மேற்கொண்டனர் என்றும் தோன்றுகிறதுஇச்செய்திகளெல்லாம் தமிழ் நூல்களிலும் பிற நூல்களிலும்ஆங்காங்கே காணப்படும் குறிப்புகளைக் கொண்டு அறியலாம்பௌத்தமதம் தமிழ்நாட்டில் செல்வாக்குப் பெற்றிருந்த செய்தி சிலப்பதிகாரம்மணிமேகலைதேவாரம்,நாலயிரப்பிரபந்தம்பெரியபுராணம்நீலகேசி முதலிய நூல்களினால் அறியக்கிடக்கின்றது.

Comments

Popular posts from this blog

தமிழ் பௌத்தம்

பௌத்த மத எழுச்சிக்கு முக்கியக் காரணமாக அமைபவர் கௌதம புத்தர் ஆவார். இவருக்கு முன்பாக பல புத்தர்கள் இருந்ததாகவும், அவர்கள் பௌத்த மத அடிக்கருத்துகளை உணர்த்தியதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் கிடைக்கின்றன. இவ்வரிசையில் இருபத்து நான்காவது புத்தராகக் கௌதம புத்தர் தோன்றினார். அவரின் ஞானத் தேடல் பௌத்த சமயத்திற்கு மேலும் வலுவூட்டியது. பௌத்த சமயம் அவைதீக சமயமாகும். இது காட்சி, அனுமானம் என்ற இரு அளவைகளை அடிப்படையாகக் கொண்டது. வேதவாக்கியம் என்ற அளவையை ஏற்காதது. இதன் காரணமாக  வேதம் சார்ந்த கொள்கைகளுக்கு முரணாக பௌத்தம் அமைந்தது. புத்தருக்குப் பின்னால் அவரின் மாணவர்கள் அவர் கருத்துகளைப் பதிவு செய்தனர். சங்கம் அமைத்தனர். சுத்த பிடகம், அபிதம்மபிடகம், விநய பிடகம் என்ற தொகுப்புகளாகப் புத்தரின் அறிவுரைகள் தொகுக்கப்பெற்றன. புத்தருக்குப் பின்பு அவரின் கருத்துகள் இருவகை நெறிகளாகப் பரவின. ஈனயானம், மகாயானம் என்பன அவை இரண்டுமாகும். இவற்றை முறையே சிறுவழி, பெருவழி என்றும் அழைக்கலாம். பெருவழியும் இருவகைப் பிரிவாக வளர்ந்தது. அவை மாத்துமிகம், யோகாசாரம் என்பனவாகும்.  சௌத்திராந்திகம், வைபாடிகம்,...
சோழ நாட்டில் சோழ நாட்டில் பல இடங்களில் புத்தரைச் சமணர் என்றும், சமணரைப் புத்தர் என்றும் கூறிவருவதைக் களப்பணியில் காணமுடிந்தது. ஆய்வின் ஆரம்ப நிலையில் எனக்கு இந்தக் குழப்பம் இருந்தது. சிற்பத்தின் அமைப்பினைத் தெளிவாகப் புரிந்துகொண்டு உறுதி செய்வதில் சுணக்கம் இருந்தது. தொடர்ந்து மேற்கொண்ட களப்பணி புத்தர் சிற்பத்திற்கும், சமண தீர்த்தங்கரர் சிற்பத்திற்கும் உள்ள வேற்றுமையைத் தெளிவுபடுத்தியது. புத்தரைத் தேடிச் சென்று சமணத் தீர்த்தங்கரர் சிற்பத்தைப் பார்த்த அனுபவம் இம்மாதப் பதிவு. மயிலை சீனி.வேங்கடசாமி பௌத்தமும் தமிழும் என்ற நூலில் புதுக்கோட்டைப் பகுதியில் புத்தர் சிற்பங்கள் உள்ள இடங்களில் ஒன்றாக ஆலங்குடிப்பட்டியைக் குறிப்பிடுகிறார். அந்நூலில் அவர் பின்வருமாறு கூறுகிறார். "ஆலங்குடிப்பட்டி: குளத்தூர் தாலுகாவில் உள்ள ஊர். இங்கு 3 அடி 6 அங்குலம் உயரமுள்ள புத்தர் உருவச்சிலை இருக்கிறது". அவரைத் தொடர்ந்து பிற அறிஞர்கள் அவர் சொன்ன கருத்தை அப்படியே கூறியுள்ளனர். கூடுதல் செய்தி எதுவும் கிடைக்கவில்லை. இந்தத் தகவலை அடிப்படையாகக் கொண்டு புதுக்கோட்டைப் பகுதியில் ஆலங்குடிப்பட்டி சென்று புத...
புத்தர் கடவுள் இல்லை. அவர் ஒரு விடுதலை பெற்ற மனிதர். பெளத்தர்கள் புத்தரை வழிபடுவதில்லை, மரியாதை செலுத்துகின்றார்கள் அல்லது நினைவு கொள்கின்றார்கள். நம் பிறப்பும் இறப்பும் ஒன்றுதான். ஒன்றில்லாமல் மற்றொன்று இருக்கமுடியாது. மக்கள் இறப்பின் போது அழுவதையும் துக்கப் படுவதையும், பிறப்பின் போது மகிழ்ந்து பூரிப்பதையும் பார்க்கும் போது கொஞ்சம் வேடிக்கையாக இருக்கிறது. இது தவறான கருத்து. நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் செய்கை. அழவேண்டுமென்றால் பிறக்கும் போது அழுவதே சரியானது. ஏனென்றால் பிறப்பில்லாமல் இற ப்பில்லை. புரிகிறதா உங்களுக்கு? ____________________ ____________________ ___________ புத்தர் அவருடைய சீடன் ஆனந்தாவிடம் 'நிலையாமையை'ப் பார்க்கச் சொன்னார். ஒவ்வொரு மூச்சிலும் மரணத்தை பார்க்கச் சொன்னார். மரணத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும்; வாழ்வதற்காகச் சாகவேண்டும். அப்படியென்றால் என்ன? இறப்பதென்றால் நம் சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் முடிவு கண்டு நிகழ் காலத்தின் உண்மையான நிலையில் இருப்பது தான். நாம் நாளைக்கு இறக்க முடியாது; இப்போதே இறக்க வேண்டும். உங்களால் செய்ய முடியுமா? முடியுமென்றால்...