Skip to main content

2

ஆனாபானாசதியின் மூலம் காயானுபஸ்ஸனம் விருத்தி செய்யும் முறை

நீங்கள் இப்போது ஆனாபானாசதி தியானத்தையே பழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்.  தியானம் செய்வதற்கு எவ்வாறு அமர வேண்டும். முதுகெழும்பை நேராக வைத்திருக்கும் முறை, உள்மூச்சு. வெளிமூச்சில் கவனமாக இருக்கும் முறை என்பன நாம் முன்னர் கற்றோம். நால்வகை சதிபட்டபான தர்மத்தினை விருத்தி செய்யும்போது விருப்பு, வெறுப்பு என்பவற்றுக்கு இடமளிக்காது  கிலேசங்களை அழிக்கும் வீரியம் கொண்டு, தர்ம அறிவு கொண்டு, விழிப்புணர்வினை பழக்கப்படுத்தும் முறையையே நாம் கற்கவுள்ளோம்.
நல்ல விழிப்புணர்வினை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறாக செய்யும் போதே நல்ல விழிப்புணர்வினை எம்மால் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். நல்ல விழிப்புணர்வே வாழ்க்கை உய்த்துணர்விற்காக உபகாரம் செய்யும் என நாம் முன்னர் கற்றோம். உங்களால் நல்ல விழிப்புணர்வினை ஏற்படுத்திக்கொள்ள முடியாவிடில். இந்த தர்மத்தினை ஒருபோதும் உய்த்துணர முடியாது. நல் விழிப்புணர்வு எனும் விடயம் உங்கள் வாழ்விற்கு மிகவும் உபகாரமாக அமையும் முக்கியமான விடயமாகும்.
குருவை இனங்கண்டு கொள்ளுங்கள்.
இன்னுமொரு முக்கியமான விடயத்தை நாம் நன்கு நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். ‘தியானம் செய்ய வேண்டுமானால் ஒரு விசேட குருவினை சந்தித்து அவரிடம் கர்மஸ்தானங்களை கற்க வேண்டும். அவ்வாறு செய்யாவிடில் அது ஆபத்து’ (புத்த பகவான் ஒருபோதும் இவ்வாறு மொழியவில்லை) எனும் இந்த கருத்து பிற்காலத்தில்தான் பரவியுள்ளது. ஆனால் புத்த பகவான்  மொழிந்த தர்மத்தின்படி நாம் குருவாக ஏற்றுக்கொள்ள வேண்டியது புத்த பகவானது நிகரற்ற தர்மத்தினையும் வினயத்தினையுமே (ஒழுக்கத்தினையுமே). புத்த பகவான் பரிநிர்வாணத்தினை அடைவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னர், “பரிநிர்வாணத்தினை எய்த பின்னர் இதுவரை காலமும் பகவான் மொழிந்த தர்மத்தினையும் ஒழுக்கக்கோட்பாடுகளையும் வழிகாட்டியாக, குருவாக ஏற்றுக்கொள்ள வேண்டும்” என மகா சங்கையரை பணித்தார். எனவே குரு தொடர்பாக எமக்கு எவ்வித பிரச்சினைகளும் எழ முடியாது. ஏனெனில் தெளிவாகவும் முறையாகவும் போதிக்கப்பட்ட பகவானது தர்மமே எமது குரு.
உண்மையான குரு யார்?
ஒரு நபர் எனும் ரீதியில் குரு என்பவர் புத்த பகவான் மொழிந்தருளிய உத்தம தர்மத்தினை போதிப்பவரா என நன்கு ஆராய்ந்து பார்க்க வேண்டும். அவர் கூறுவது புத்த பகவானால் போதிக்கப்பட்ட உத்தம தர்மம் என்றால் அங்கு புத்தபகவானது கருத்து, புத்த பகவானது மனப்பான்மை, இலட்சியம் என்பன தெளிவாக உணர முடியும். தன் தனிப்பட்ட கருத்துக்களை தர்மம் எனக்கூறாமல் புத்த பகவான் மொழிந்த தர்மத்தினை அந்த நபர்     உள்ளவாறே கூறுவதே அதற்கு காரணமாகும்.
சந்தேகிக்க வேண்டிய  சந்தர்ப்பம்
புத்த பகவானது தர்மத்தில் புத்த பகவான் தெளிவாகவே இந்த விடயத்தை மொழிந்துள்ளார். (ததாகதப்பவேதிதோ தம்ம வினயோ விவடோ விரோசதி நோ படிச்சன்னோ) தாதகரான புத்த பகவான் மொழிந்த உத்தம தர்மமும் வினயமும் (ஒழுக்கக்கோட்பாடுகளும்) வெளிப்படையாக இருக்கும்போதே பிரகாசிக்கும். மறைந்திருக்கும்போது பிரகாசிக்காது.
குரு முஷ்டிகள் இல்லை.
புத்த பகவான் யாருக்கும் தனிமையாக இரகசியமாக தியான உபதேசங்கள் செய்யவில்லை. இரகசியமாக தர்ம உபதேசங்கள் செய்யவில்லை. புத்தபகவான் மொழிந்த போதனைகள், தியானங்கள், ஒழுக்ககோட்பாடுகள் எனும் அனைத்துமே  சங்கீதியம் செய்யப்பட்டது. அங்கு ஒளிவு மறைவு என எதுவுமே இல்லை. புத்த பகவானது தர்மம் இரகசியங்கள் அற்றது. இதனாலேயே புத்த தர்;மம் ஷஏஹிபஸ்ஸிக| எனும் குணம் கொண்டதாக விளங்குகிறது. அதாவது ‘வாருங்கள் வந்து ஆராய்ந்து பாருங்கள்’ என அறைகூவல் விடுவதே புத்த பகவானது தர்மமாகும். இந்த குணம் கொண்ட தர்மத்தில் இரகசியங்கள் உபதேசங்கள் இல்லை. எங்கேயாயினும் தியானம் என கூறி இரகசிய அறிவுரைகள் செய்வார்களாயின் அங்கு தூய்மையான புத்த தர்மம் இருக்கும் என நீங்கள் ஏமாற வேண்டாம். அதுவே சந்தேகிக்க வேண்டிய இடமாகும்.
புத்த பகவானது தர்மத்தில் இரகசியங்கள் இல்லை. பகவானது தர்மத்தின் எந்த பாகத்தினை வேண்டுமானாலும் வெளிப்படையாக பேசலாம். அங்கு மறைப்பதற்கு எதுவும் இல்லை. பகவானது தர்மத்தினை திறந்தால் பிரகாசிக்கும். மூடி வைத்தால் பிரகாசிக்காது.
புத்த சாசனம் நீண்ட காலம் நிலைக்க வேண்டுமாயின்
ஒருநாள் ஆனந்த தேரர் புத்த பகவானிடம் இவ்வாறாக வினவினார். ‘பகவானே, இந்த புத்தசாசனம் நீண்ட காலம் நிலைத்திருப்பதற்கு காரணியாக அமையும் விடயங்கள் என்ன?’ என்று. அதற்கு பகவான் ‘நால்வகை சதிபட்டான தர்மங்களை விருத்தி செய்தல், நால்வகை சதிபட்டான தர்மங்கள் தொடர்பாக பேசுதல், நால்வகை சதிபட்டான தர்மங்களை பின்பற்றுதல், பயிற்சி செய்தல் எனும் இவ் விடயங்களை செய்யாவிடில் புத்த சாசனம் மறைந்துவிடும். நாம் இப்போது இங்கே கற்றுக்கொண்டிருப்பதுவும் நால்வகை சதிபட்டான தர்மங்களை பற்றியே.
ஆனாபானசதியின் முதலாவது படி
விழிப்புணர்வுடன் மூச்சினை உள்ளெடுப்பதும் வெளியே விடுவதும் தொடர்பாகவே நாம் இதுவரை பேசினோம்.  இவ்வாறாக நீங்கள் முழு கவனத்துடன் மூச்சினை உள்ளெடக்கும் போது  வெளியிடும்போது காலப்போக்கில் உங்கள் முழுக்கவனமும் உள்மூச்சு மற்றும் வெளிமூச்சில் நிலைக்க ஆரம்பிக்கும். மனம் எங்கும் சிதறாது முழுமையாக உங்கள் கவனத்தினை மூச்சின்; மீதே நிலைக்கச்செய்ய முடியும். இதுவே ஆனாபானசதி தியானத்தின் முதலாவது படியாகும்.
மூச்சுக்காற்றின் மாற்றங்கள்.
இவ்வாறாக மூச்சினை உள்ளெடுக்கும்போது வெளியிடும்போது மூச்சுக்காற்றில் ஏற்படும் மாற்றங்களை உணர்ந்துகொள்வதே ஆனாபானசதியின் இரண்டாவது படியாகும். சில மூச்சுக்காற்றுகள் நீளமானவையாக இருக்கும். சில மூச்சுக்காற்றுகள் குறுகியனவாக இருக்கும். நீங்கள் முழுக்கவனத்துடன் சுவாசிப்பதால் நீண்ட மூச்சினை உள்ளெடுக்கும்போது ஷநீண்ட மூச்சினை உள்ளெடுக்கிறேன்| என்பதனை உணர்ந்துகொள்வீர். நீண்ட மூச்சினை வெளியிடும்போது ஷநீண்ட மூச்சினை வெளியிடுகிறேன| என உணர்;ந்துகொள்வீர். குறுகியளவிலான மூச்சினை உள்ளெடுக்கும் போது ஷகுறுகிய மூச்சினை உள்ளெடுக்கிறேன்| என்பதனை உணர்ந்துகொள்வீர். குறுகிய மூச்சினை வெளியிடும்போது ஷகுறுகிய மூச்சினை வெளியிடுகிறேன்| என்பதனை உணர்ந்து கொள்வீர். இதனை உணர்ந்து கொள்வதற்கு மூச்சுக்காற்றின் மீது முழுக்கவனத்துடன் இருப்பதுவே காரணமாகும்.

இழைப்புளியின் உவமை
புண்ணியமிக்கவர்களே, இங்கு புத்த பகவான் ஆனாபானசதி தியானம் தொடர்பாக அழகிய உவமையை மொழிந்துள்ளார். திறமையானதொரு தச்சன் இருக்கிறார். அவர் தனது சீவுளியை எடுத்து நன்கு கையை நீட்டி பலகையை சீவுகிறார். இவ்வாறாக கை நீட்டி அவர் பலகை சீவும்போது ‘நான் இப்போது நன்கு கையை நீட்டி பலகையை சீவுகிறேன்’ என்பதனை அறிவார். சில வேளைகளில் அவர் கையை மடித்து சிறிதளவு பலகைளை சீவுகிறார். இவ்வாறாக பலகையை சீவும் அவர், ‘நான் இப்போது கையை மடித்து குறுகிய அளவில் பலகையை சீவுகிறேன்’, என்பதனை அறிவார். இது போன்றதே ஆனாபானசதி தியானமும்.
சீவுளியால் பலகையை சீவும் மனிதர் அறிந்துகொள்வதைப்போன்றே ஆனாபானசதி தியானம் செய்பவர், தான்  நீண்ட மூச்சினை உள்ளெடுக்கும்போது ‘நான் இப்போது நீண்ட மூச்சினை உள்ளெடுக்கிறேன்’ என்பதனை அறிந்துகொள்வார். நீண்ட வெளிமூச்சினை விடும்போது ‘நான் இப்போது நீண்ட வெளிமூச்சினை விடுகிறேன்’ என்பதனை அறிந்துகொள்வார். அதேபோல் குறுகிய உள்மூச்சு எடுக்கும்போதும் குறுகிய வெளிமூச்சு விடும்போதும் அதனை நன்கு உணர்ந்து கொள்வார்.
உங்களது முயற்சியினாலும் அறிவினாலும் வீரியத்தினாலுமே செய்ய வேண்டும்.
புத்த பகவான் இதனை உணர்ந்து கொள்வதற்கு எவ்வளவு அழகானதொரு உவமையை மொழிந்துள்ளார் என்பதனை பார்த்தீர்களா? இவ்வாறாக உள்மூச்சு வெளிமூச்சு தொடர்பாக நன்கு உணர்ந்துகொள்ளும்போது தியானத்தில் உங்கள் மனம் நிலைத்திருக்கும். அதாவது உங்களால் மனதை சிதறவிடாது சுவாச காற்றிலேயே நிலைக்கச்செய்வதற்கு இப்போது உங்களால் முடியும். ஆனால் அதனை உங்களது வீரியம், முயற்சி, தர்மஞானம் என்பவற்றை கொண்டே செய்துகொண்டீர்கள்.
உங்களது முயற்சியை குறைத்த பின்னர் நீங்கள் மீண்டும் பழைய நிலைக்கே ஆளாகிவிடுவீர்கள். இடைவிடாது உள்மூச்சு வெளிமூச்சு என்பவற்றின் மீது விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். நீங்கள் இவ்வாறாக சுவாசத்தின் மீது விழிப்புணர்வுடன் இருக்கும்போது நீண்ட மூச்சினை உள்ளெடுத்தல், நீண்ட மூச்சினை வெளியிடுதல், குறுகிய மூச்சினை உள்ளெடுத்தல், குறுகிய மூச்சினை வெளியிடுதல் என்பன மிகத்தெளிவாக உணர்ந்துகொள்ள முடியும். அப்போது உங்களால் முழுமையாக   சுவாசத்தின் இயல்பினை உணர்ந்து கொள்ள முடியும். அதாவது எவ்வாறு மூச்சு உட்செல்கிறது. மூச்சுக்காற்று உட்சென்று வெளியே வரும்போது நீங்கள் அந்த மூச்சுக்காற்று தொடர்பாக நன்கு உணர்ந்திருப்பீர்கள். அதேபோன்று வெளியிடும் மூச்சு தொடர்பாகவும் நீங்கள் நன்கு உணர்ந்திருப்பீர்கள்.
உள்மூச்சு வெளிமூச்சு எனும் சுவாசமும் ஒரு உடலாகும்.
உள்மூச்சு வெளிமூச்சு எனும் சுவாசம் ஒரு வகையான உடலே என தர்மத்தில் குறிப்பிடப்படுகிறது. அதனாலேயே தர்மத்தில் சப்பகாய படிசங்வேதி எனக்கூற காரணம். அதற்கு காரணம் இந்த சுவாசம் இந்த உடலுடன் பிணைந்து இருப்பதாகும். ஒன்றித்து இருப்பதாகும். அது காய சங்காரம் எனவும் தர்மத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உள்மூச்சு வெளிமூச்சு என்பவற்றின் மீது முழுமையாக கவனம் செலுத்தி மூச்சினை உள்ளெடுப்பதுவும் வெளியடுவதும் தொடர்பாக அவதானத்தை செலுத்தி இந்த உள் மூச்சு வெளிமூச்சினை நன்கு உணர்ந்து கொண்டு சுவாசத்திலேயே மனதை நிலைக்கச்செய்யும்போது (பஸ்ஸம்பயங் காய சங்காரங்) உங்களது மனம் சமாதியடையும்போது உங்களது சுவாசக்காற்று இலகுவாகும். சுவாசம் இலகுவாகும்போது அந்த சுவாசத்தினையும் நன்கு உணர்ந்துகொண்டு அந்த உள்மூச்சு வெளிமூச்சு என்பவற்றில் மனதை நிலைக்கச்செய்ய வேண்டும். அதாவது மூச்சினை உள்ளெடுக்கும்போதும் அது இலேசாக இருக்கிறது. வெளியிடும் மூச்சும் இலகுவாக இருக்கிறது இதனை நன்கு உணர்ந்துகொண்டு மூச்சு எடுக்க வேண்டும். மூச்சினை வெளிவிட வேண்டும்.
இப்போது நீங்கள் ஆனாபானசதி எனும் தியானத்தினுள் மூச்சு எடுக்கும் முறை மூச்சினை வெளியிடும் முறை, நீண்ட மூச்சினை உள்ளெடுத்தல், நீண்ட மூச்சினை வெளியிடல், குறுகிய மூச்சினை உள்ளெடுத்தல், குறுகிய மூச்சினை வெளியிடல், சுவாசக்காற்றின் இலகுவான நிலை என்பன நன்கு உணர்ந்துகொண்டு ஆனாபானசதி தியானத்தினை மேலும் விருத்தி செய்துகொள்வதற்கு திறமையானவராவீர்.

Comments

Popular posts from this blog

தமிழ் பௌத்தம்

பௌத்த மத எழுச்சிக்கு முக்கியக் காரணமாக அமைபவர் கௌதம புத்தர் ஆவார். இவருக்கு முன்பாக பல புத்தர்கள் இருந்ததாகவும், அவர்கள் பௌத்த மத அடிக்கருத்துகளை உணர்த்தியதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் கிடைக்கின்றன. இவ்வரிசையில் இருபத்து நான்காவது புத்தராகக் கௌதம புத்தர் தோன்றினார். அவரின் ஞானத் தேடல் பௌத்த சமயத்திற்கு மேலும் வலுவூட்டியது. பௌத்த சமயம் அவைதீக சமயமாகும். இது காட்சி, அனுமானம் என்ற இரு அளவைகளை அடிப்படையாகக் கொண்டது. வேதவாக்கியம் என்ற அளவையை ஏற்காதது. இதன் காரணமாக  வேதம் சார்ந்த கொள்கைகளுக்கு முரணாக பௌத்தம் அமைந்தது. புத்தருக்குப் பின்னால் அவரின் மாணவர்கள் அவர் கருத்துகளைப் பதிவு செய்தனர். சங்கம் அமைத்தனர். சுத்த பிடகம், அபிதம்மபிடகம், விநய பிடகம் என்ற தொகுப்புகளாகப் புத்தரின் அறிவுரைகள் தொகுக்கப்பெற்றன. புத்தருக்குப் பின்பு அவரின் கருத்துகள் இருவகை நெறிகளாகப் பரவின. ஈனயானம், மகாயானம் என்பன அவை இரண்டுமாகும். இவற்றை முறையே சிறுவழி, பெருவழி என்றும் அழைக்கலாம். பெருவழியும் இருவகைப் பிரிவாக வளர்ந்தது. அவை மாத்துமிகம், யோகாசாரம் என்பனவாகும்.  சௌத்திராந்திகம், வைபாடிகம்,...
சோழ நாட்டில் சோழ நாட்டில் பல இடங்களில் புத்தரைச் சமணர் என்றும், சமணரைப் புத்தர் என்றும் கூறிவருவதைக் களப்பணியில் காணமுடிந்தது. ஆய்வின் ஆரம்ப நிலையில் எனக்கு இந்தக் குழப்பம் இருந்தது. சிற்பத்தின் அமைப்பினைத் தெளிவாகப் புரிந்துகொண்டு உறுதி செய்வதில் சுணக்கம் இருந்தது. தொடர்ந்து மேற்கொண்ட களப்பணி புத்தர் சிற்பத்திற்கும், சமண தீர்த்தங்கரர் சிற்பத்திற்கும் உள்ள வேற்றுமையைத் தெளிவுபடுத்தியது. புத்தரைத் தேடிச் சென்று சமணத் தீர்த்தங்கரர் சிற்பத்தைப் பார்த்த அனுபவம் இம்மாதப் பதிவு. மயிலை சீனி.வேங்கடசாமி பௌத்தமும் தமிழும் என்ற நூலில் புதுக்கோட்டைப் பகுதியில் புத்தர் சிற்பங்கள் உள்ள இடங்களில் ஒன்றாக ஆலங்குடிப்பட்டியைக் குறிப்பிடுகிறார். அந்நூலில் அவர் பின்வருமாறு கூறுகிறார். "ஆலங்குடிப்பட்டி: குளத்தூர் தாலுகாவில் உள்ள ஊர். இங்கு 3 அடி 6 அங்குலம் உயரமுள்ள புத்தர் உருவச்சிலை இருக்கிறது". அவரைத் தொடர்ந்து பிற அறிஞர்கள் அவர் சொன்ன கருத்தை அப்படியே கூறியுள்ளனர். கூடுதல் செய்தி எதுவும் கிடைக்கவில்லை. இந்தத் தகவலை அடிப்படையாகக் கொண்டு புதுக்கோட்டைப் பகுதியில் ஆலங்குடிப்பட்டி சென்று புத...
புத்தர் கடவுள் இல்லை. அவர் ஒரு விடுதலை பெற்ற மனிதர். பெளத்தர்கள் புத்தரை வழிபடுவதில்லை, மரியாதை செலுத்துகின்றார்கள் அல்லது நினைவு கொள்கின்றார்கள். நம் பிறப்பும் இறப்பும் ஒன்றுதான். ஒன்றில்லாமல் மற்றொன்று இருக்கமுடியாது. மக்கள் இறப்பின் போது அழுவதையும் துக்கப் படுவதையும், பிறப்பின் போது மகிழ்ந்து பூரிப்பதையும் பார்க்கும் போது கொஞ்சம் வேடிக்கையாக இருக்கிறது. இது தவறான கருத்து. நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் செய்கை. அழவேண்டுமென்றால் பிறக்கும் போது அழுவதே சரியானது. ஏனென்றால் பிறப்பில்லாமல் இற ப்பில்லை. புரிகிறதா உங்களுக்கு? ____________________ ____________________ ___________ புத்தர் அவருடைய சீடன் ஆனந்தாவிடம் 'நிலையாமையை'ப் பார்க்கச் சொன்னார். ஒவ்வொரு மூச்சிலும் மரணத்தை பார்க்கச் சொன்னார். மரணத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும்; வாழ்வதற்காகச் சாகவேண்டும். அப்படியென்றால் என்ன? இறப்பதென்றால் நம் சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் முடிவு கண்டு நிகழ் காலத்தின் உண்மையான நிலையில் இருப்பது தான். நாம் நாளைக்கு இறக்க முடியாது; இப்போதே இறக்க வேண்டும். உங்களால் செய்ய முடியுமா? முடியுமென்றால்...