Skip to main content
தமிழ் நாட்டு புத்தர் சிலைகள்


தீபாவளி நேர வார இறுதியில், தஞ்சாவூர் சரஸ்வதி மகால் சிலைகள் அருங்காசியகத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பலவகையான சிலைகள் மிக அருமையாக காணக்கிடைத்தன. கற்களால் ஆன சிலைகள் மட்டும் இன்றி, உலோக சிலைகளும் கண்களைக் கவரும் வண்ணம் இருந்தன.





பல்வேறு சிலைகளுள் தமிழ் நாட்டில் இருந்து கிடைக்கபெற்ற இரு புத்தர் சிலைகளும் அங்கு காணக்கிடைத்தது.



பட்டீஸ்வரம் புத்தர்

இது பட்டீஸ்வரத்தில் இருந்து எடுக்கப்பட்டது. விஜயநகரம் காலத்தை சார்ந்தது. காலம் - 14ஆம் - 16ஆம் நூற்றாண்டு. அதுவரை தமிழ்நாட்டில் பௌத்த மதம் இருந்திருக்கிறது.



(இதற்கு முன் பட்டீஸ்வரத்தில் உள்ள துர்கா தேவியை தரிசித்துவிட்டே தஞ்சாவூர் வந்தோம் என்பது கூடுதல் சேதி :-) )



வரலாற்றாசிரியர்கள், பொதுவாக பௌத்த மதம் தென்னாட்டில் நீண்ட நாட்கள் நிலைத்திருந்ததாக கருத்தை கொண்டுள்ளனர். வடநாட்டில் பௌத்த மதம் முற்றிலும் மறைந்த பிறகும் சில நூற்றாண்டுகள் தமிழ் நாட்டில் நிலைத்திருந்தாக கருதுகின்றனர்.



மிகவும் அழகான நிலையில் புத்தர் வீற்றிருக்கிறார்







கரங்கள் தியான முத்திரையை காட்டுகின்றன. தலையில் புத்தர்களுக்கே உண்டான உஷ்ணீஷமும் நெற்றில் திலமும் காணபப்டுகின்றன.



உள்ளங்கையில் தர்மசக்கரம் பொறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.







புத்தரின் திருவதனம்







மதகரம் புத்தர்

11ஆம் நூற்றாண்டை சார்ந்த சிலை







இதுவும் தியான நிலையில் அமர்ந்த புத்தரின் சிலை.















இங்கும் கைகளில் தர்மசக்கரம் பொறிக்கப்பட்டுள்ளது.























Comments

Popular posts from this blog

தமிழ் பௌத்தம்

பௌத்த மத எழுச்சிக்கு முக்கியக் காரணமாக அமைபவர் கௌதம புத்தர் ஆவார். இவருக்கு முன்பாக பல புத்தர்கள் இருந்ததாகவும், அவர்கள் பௌத்த மத அடிக்கருத்துகளை உணர்த்தியதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் கிடைக்கின்றன. இவ்வரிசையில் இருபத்து நான்காவது புத்தராகக் கௌதம புத்தர் தோன்றினார். அவரின் ஞானத் தேடல் பௌத்த சமயத்திற்கு மேலும் வலுவூட்டியது. பௌத்த சமயம் அவைதீக சமயமாகும். இது காட்சி, அனுமானம் என்ற இரு அளவைகளை அடிப்படையாகக் கொண்டது. வேதவாக்கியம் என்ற அளவையை ஏற்காதது. இதன் காரணமாக  வேதம் சார்ந்த கொள்கைகளுக்கு முரணாக பௌத்தம் அமைந்தது. புத்தருக்குப் பின்னால் அவரின் மாணவர்கள் அவர் கருத்துகளைப் பதிவு செய்தனர். சங்கம் அமைத்தனர். சுத்த பிடகம், அபிதம்மபிடகம், விநய பிடகம் என்ற தொகுப்புகளாகப் புத்தரின் அறிவுரைகள் தொகுக்கப்பெற்றன. புத்தருக்குப் பின்பு அவரின் கருத்துகள் இருவகை நெறிகளாகப் பரவின. ஈனயானம், மகாயானம் என்பன அவை இரண்டுமாகும். இவற்றை முறையே சிறுவழி, பெருவழி என்றும் அழைக்கலாம். பெருவழியும் இருவகைப் பிரிவாக வளர்ந்தது. அவை மாத்துமிகம், யோகாசாரம் என்பனவாகும்.  சௌத்திராந்திகம், வைபாடிகம்,...
சோழ நாட்டில் சோழ நாட்டில் பல இடங்களில் புத்தரைச் சமணர் என்றும், சமணரைப் புத்தர் என்றும் கூறிவருவதைக் களப்பணியில் காணமுடிந்தது. ஆய்வின் ஆரம்ப நிலையில் எனக்கு இந்தக் குழப்பம் இருந்தது. சிற்பத்தின் அமைப்பினைத் தெளிவாகப் புரிந்துகொண்டு உறுதி செய்வதில் சுணக்கம் இருந்தது. தொடர்ந்து மேற்கொண்ட களப்பணி புத்தர் சிற்பத்திற்கும், சமண தீர்த்தங்கரர் சிற்பத்திற்கும் உள்ள வேற்றுமையைத் தெளிவுபடுத்தியது. புத்தரைத் தேடிச் சென்று சமணத் தீர்த்தங்கரர் சிற்பத்தைப் பார்த்த அனுபவம் இம்மாதப் பதிவு. மயிலை சீனி.வேங்கடசாமி பௌத்தமும் தமிழும் என்ற நூலில் புதுக்கோட்டைப் பகுதியில் புத்தர் சிற்பங்கள் உள்ள இடங்களில் ஒன்றாக ஆலங்குடிப்பட்டியைக் குறிப்பிடுகிறார். அந்நூலில் அவர் பின்வருமாறு கூறுகிறார். "ஆலங்குடிப்பட்டி: குளத்தூர் தாலுகாவில் உள்ள ஊர். இங்கு 3 அடி 6 அங்குலம் உயரமுள்ள புத்தர் உருவச்சிலை இருக்கிறது". அவரைத் தொடர்ந்து பிற அறிஞர்கள் அவர் சொன்ன கருத்தை அப்படியே கூறியுள்ளனர். கூடுதல் செய்தி எதுவும் கிடைக்கவில்லை. இந்தத் தகவலை அடிப்படையாகக் கொண்டு புதுக்கோட்டைப் பகுதியில் ஆலங்குடிப்பட்டி சென்று புத...
பகவன் புத்தரின் திருவுருவம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாக, பல்வேறு ஞாபக சின்னங்கள் (அ) குறியீடுகள் வணங்கப்பட்டன (BC 480 – AD180). அந்த ஞாபக குறியீடுகள் பகவன் புத்தரின் வாழ்க்கையோடு தொடர்புடையது. நினைவு சின்னங்கள் அறிவர் அண்ணல் அம்பேத்கர் கீழ்கண்ட பௌத்த நினைவு குறியீடுகளை 22 சூலை 1947ல் அரசமைப்புச் சட்டப்பேரவை மூலம் நம் நாட்டு நினைவு சின்னங்களாக கொண்டுவந்தார். தேசியக் கொடியின் மத்தியில் தம்மச்சக்கரம்  நம் நாட்டு தேசியக்கொடியின் மையத்தில் தம்மச்சக்கரம் பொறிக்கப்பட்டுள்ளது. தம்ம சக்கரத்தில் உள்ள 24 கம்பிகளும் வாழ்க்கை சுழற்சியை தோற்ற வரிசையில் 12 சார்புகளையும் மறைவு வரிசையில் 12 சார்புகளையும் குறிப்பிடுகிறது. 12 சார்புகள் 01. பேதமை, 02. செய்கை, 03. உணர்வு, 04. அருவுரு, 05. வாயில், 06. ஊரு 07. நுகர்வு, 08. வேட்கை 09.பற்று, 10. பவம், 11. தோற்றம், 12. வினைப்பயன் தேசிய மலர்  தாமரை தூய்மையின் அடையாளம். அதனால் தான் பகவன் புத்தர் மலர்ந்த தாமரை மீது அமர்ந்திருக்கிறார். தூய்மை பாதையின் அம்சங்கள் சம்சாரம்- தாமரை சேற்றில் இருந்து வளர்கிறது  தூய்மை- சேற்று தண்ணீரில் வளர்ந்தாலும் மேற...