Skip to main content




பிராமணன் என்பவன் யார்?.


வேத புத்தகத்தை படிப்பவன் பிராமணனா ?.குரு முலம் தீக்சை பெற்றவன் பிராமனணா?. புராண இதிகாசங்களை படிக்க கேட்டவன் பிராமனணா?.தெய்வ பக்தியில் பைத்தியக்காரன்ப் போன்றவன் பிராமனணா?.பூசை, ஆரதனை, அர்ச்சனை செய்து பழகியவன் பிராமனணா?.துறந்து அக்கினியை அடைகாப்பவன் பிராமனணா?.உலக மருவ போய் உபதேசம் செய்து ஜீவிப்பவன் பிராமனணா?.சிறிய போர்வைத் துணி தெரிய உடம்பில் அணியாதவன் பிராமனணா?. பிரம்மா முகத்தில் பிறந்தேன் என்பவன் பிராமனணா?.சுவாமியை எங்கள் பரம்பரையர் வர பெற்றவர்கள் என்பவன் பிராமனணா?.ஓரிடத்தில் முதலில் பிறந்தவன் என்றும் மற்றோர் இடத்தில இரண்டாம் பிறந்தோர் என்றும் பிதற்றுவன் பிராமனணா?.கோழி வயிற்றில் இருந்து முட்டையும், அதே முட்டையில் இருந்து கோழி பிறந்தது போன்று பிறந்தவன் என்று சொல்லுபவன் பிராமனணா?.கருப்பு இந்தியர்க்களுக்கு வேதம் கற்பிப்பவன் என்று உளறுபவன் பிராமனணா?.சாதிகளுக்கு அதியனவன் என்பவன் பிராமனணா?.இந்தியர்களை அடிமை படுத்தியவன் என்பவன் பிராமனணா?.வேத புளுகுகளை படிக்கக் கெட்ட சூத்திரன் காதில் காய்ச்சிய ஈயத்தை ஊற்ற அரசருக்கு கற்பித்தவன் பிராமனணா?.சத்திரியர்கள், வைசியர்களை வசியபடுத்தி ஆழ நினைப்பவன் பிராமனணா?.நீதி மன்றத்தில் வேலை பார்ப்பவன் பிராமனணா?.தானே கடவுள் அல்லது தன்னை போலவே கடவுள் வருவர் என்பவன் பிராமனணா?. செத்தவர்கள் பேரில் அரிசி, பருப்பு வங்கி ஜீவிப்பவன் பிராமனணா?.மூட, மத சடங்குகளில் மூழ்கியவன் பிராமனணா?. இல்லை இல்லை இல்லை ........சர்வ பட்ட்ருக்கள் அற்று சமதர்மத்தில் நின்று உண்மையை போதிப்பவன் எவனே அவனே உண்மையான பிராமணான். அவனே சத்தியவான் , அவனே அறிவுடையவன் .......


பண்டிதர் அயோத்திதாசர்

Comments

Popular posts from this blog

தமிழ் பௌத்தம்

பௌத்த மத எழுச்சிக்கு முக்கியக் காரணமாக அமைபவர் கௌதம புத்தர் ஆவார். இவருக்கு முன்பாக பல புத்தர்கள் இருந்ததாகவும், அவர்கள் பௌத்த மத அடிக்கருத்துகளை உணர்த்தியதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் கிடைக்கின்றன. இவ்வரிசையில் இருபத்து நான்காவது புத்தராகக் கௌதம புத்தர் தோன்றினார். அவரின் ஞானத் தேடல் பௌத்த சமயத்திற்கு மேலும் வலுவூட்டியது. பௌத்த சமயம் அவைதீக சமயமாகும். இது காட்சி, அனுமானம் என்ற இரு அளவைகளை அடிப்படையாகக் கொண்டது. வேதவாக்கியம் என்ற அளவையை ஏற்காதது. இதன் காரணமாக  வேதம் சார்ந்த கொள்கைகளுக்கு முரணாக பௌத்தம் அமைந்தது. புத்தருக்குப் பின்னால் அவரின் மாணவர்கள் அவர் கருத்துகளைப் பதிவு செய்தனர். சங்கம் அமைத்தனர். சுத்த பிடகம், அபிதம்மபிடகம், விநய பிடகம் என்ற தொகுப்புகளாகப் புத்தரின் அறிவுரைகள் தொகுக்கப்பெற்றன. புத்தருக்குப் பின்பு அவரின் கருத்துகள் இருவகை நெறிகளாகப் பரவின. ஈனயானம், மகாயானம் என்பன அவை இரண்டுமாகும். இவற்றை முறையே சிறுவழி, பெருவழி என்றும் அழைக்கலாம். பெருவழியும் இருவகைப் பிரிவாக வளர்ந்தது. அவை மாத்துமிகம், யோகாசாரம் என்பனவாகும்.  சௌத்திராந்திகம், வைபாடிகம்,...
சோழ நாட்டில் சோழ நாட்டில் பல இடங்களில் புத்தரைச் சமணர் என்றும், சமணரைப் புத்தர் என்றும் கூறிவருவதைக் களப்பணியில் காணமுடிந்தது. ஆய்வின் ஆரம்ப நிலையில் எனக்கு இந்தக் குழப்பம் இருந்தது. சிற்பத்தின் அமைப்பினைத் தெளிவாகப் புரிந்துகொண்டு உறுதி செய்வதில் சுணக்கம் இருந்தது. தொடர்ந்து மேற்கொண்ட களப்பணி புத்தர் சிற்பத்திற்கும், சமண தீர்த்தங்கரர் சிற்பத்திற்கும் உள்ள வேற்றுமையைத் தெளிவுபடுத்தியது. புத்தரைத் தேடிச் சென்று சமணத் தீர்த்தங்கரர் சிற்பத்தைப் பார்த்த அனுபவம் இம்மாதப் பதிவு. மயிலை சீனி.வேங்கடசாமி பௌத்தமும் தமிழும் என்ற நூலில் புதுக்கோட்டைப் பகுதியில் புத்தர் சிற்பங்கள் உள்ள இடங்களில் ஒன்றாக ஆலங்குடிப்பட்டியைக் குறிப்பிடுகிறார். அந்நூலில் அவர் பின்வருமாறு கூறுகிறார். "ஆலங்குடிப்பட்டி: குளத்தூர் தாலுகாவில் உள்ள ஊர். இங்கு 3 அடி 6 அங்குலம் உயரமுள்ள புத்தர் உருவச்சிலை இருக்கிறது". அவரைத் தொடர்ந்து பிற அறிஞர்கள் அவர் சொன்ன கருத்தை அப்படியே கூறியுள்ளனர். கூடுதல் செய்தி எதுவும் கிடைக்கவில்லை. இந்தத் தகவலை அடிப்படையாகக் கொண்டு புதுக்கோட்டைப் பகுதியில் ஆலங்குடிப்பட்டி சென்று புத...
பகவன் புத்தரின் திருவுருவம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாக, பல்வேறு ஞாபக சின்னங்கள் (அ) குறியீடுகள் வணங்கப்பட்டன (BC 480 – AD180). அந்த ஞாபக குறியீடுகள் பகவன் புத்தரின் வாழ்க்கையோடு தொடர்புடையது. நினைவு சின்னங்கள் அறிவர் அண்ணல் அம்பேத்கர் கீழ்கண்ட பௌத்த நினைவு குறியீடுகளை 22 சூலை 1947ல் அரசமைப்புச் சட்டப்பேரவை மூலம் நம் நாட்டு நினைவு சின்னங்களாக கொண்டுவந்தார். தேசியக் கொடியின் மத்தியில் தம்மச்சக்கரம்  நம் நாட்டு தேசியக்கொடியின் மையத்தில் தம்மச்சக்கரம் பொறிக்கப்பட்டுள்ளது. தம்ம சக்கரத்தில் உள்ள 24 கம்பிகளும் வாழ்க்கை சுழற்சியை தோற்ற வரிசையில் 12 சார்புகளையும் மறைவு வரிசையில் 12 சார்புகளையும் குறிப்பிடுகிறது. 12 சார்புகள் 01. பேதமை, 02. செய்கை, 03. உணர்வு, 04. அருவுரு, 05. வாயில், 06. ஊரு 07. நுகர்வு, 08. வேட்கை 09.பற்று, 10. பவம், 11. தோற்றம், 12. வினைப்பயன் தேசிய மலர்  தாமரை தூய்மையின் அடையாளம். அதனால் தான் பகவன் புத்தர் மலர்ந்த தாமரை மீது அமர்ந்திருக்கிறார். தூய்மை பாதையின் அம்சங்கள் சம்சாரம்- தாமரை சேற்றில் இருந்து வளர்கிறது  தூய்மை- சேற்று தண்ணீரில் வளர்ந்தாலும் மேற...